< Back
மாநில செய்திகள்
முதியவருக்கு அரிவாள் வெட்டு
திருச்சி
மாநில செய்திகள்

முதியவருக்கு அரிவாள் வெட்டு

தினத்தந்தி
|
22 May 2022 8:30 PM GMT

முதியவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

திருச்சி:

திருச்சி சங்கிலியாண்டபுரம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் கோவிந்தராஜ்(வயது 63). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஹரி, டேவிட், விஜய் ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்தநிலையில் சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறின்போது, அவர்கள் 3 பேரும் கோவிந்தராஜின் தலையில் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் ஹரி, டேவிட், விஜய் ஆகியோர் மீது பாலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்