< Back
மாநில செய்திகள்
பங்க் உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு
சிவகங்கை
மாநில செய்திகள்

'பங்க்' உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு

தினத்தந்தி
|
26 May 2022 8:17 PM GMT

பெட்ரோல் போடுவதில் தகராறு ஏற்பட்டதை தொடர்ந்து ‘பங்க்’ உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

சிவகங்கை,

சிவகங்கை ஒன்றிய அ.தி.மு.க. இளைஞரணி செயலாளராக இருப்பவர் பாபு (வயது 45) இவர் சிவகங்கையை அடுத்த முத்துப்பட்டி கிராமத்தில் பெட்ரோல் பங்க் வைத்துள்ளார். இவருக்கும் பெட்ரோல் பங்க் அருகில் உள்ள வீட்டில் வசிக்கும் ராஜேந்திரன் என்பவருக்கும் இடப்பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று பெட்ரோல் போடுவது சம்பந்தமாக இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதாம். இந்த தகராறில் ராஜேந்திரன் அரிவாளால் வெட்டியதில் பாபுவிற்கு காயம், ஏற்பட்டது. இதை தடுத்த பெட்ரோல் பங்கில் வேலை பார்க்கும் தவச்செல்வம் என்பவருக்கும் வெட்டு காயம் ஏற்பட்டுள்ளது. இதே போல் பாபு தரப்பினர் திருப்பி தாக்கியதில் ராஜேந்திரனுக்கும் கையில் காயம் ஏற்பட்டது. 3 பேரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது சம்பந்தமாக சிவகங்கை தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்