< Back
மாநில செய்திகள்
சக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
வேலூர்
மாநில செய்திகள்

சக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

தினத்தந்தி
|
22 May 2022 5:49 PM GMT

கே.வி.குப்பம் அருகே சக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கே.வி.குப்பம்

கே.வி.குப்பம் அருகே மேல்காவனூர் கிராமத்தில் உள்ள சக்தி மாரியம்மன் கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, வாஸ்து சாந்தி, பிரவேச பலி, மகா தீபாராதனை, கும்ப அலங்காரம், யாகசாலை பிரவேசம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மகாதேவமலை மகானந்த சித்தர் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். நிகழ்ச்சியையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தொடர்ந்து திங்கட்கிழமை கரகம் வீதி உலா, கூழ்வார்த்தல், இன்னிசைக் கச்சேரி, செவ்வாய்க்கிழமை தேர்த்திருவிழா நடைபெறுகிறது.

விழாவுக்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள், இளைஞர்கள் செய்து இருந்தனர்.


Related Tags :
மேலும் செய்திகள்