< Back
மாநில செய்திகள்
பாலியல் வழக்கு: இருவிரல் பரிசோதனை - தமிழக டிஜிபிக்கு, சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
மாநில செய்திகள்

பாலியல் வழக்கு: இருவிரல் பரிசோதனை - தமிழக டிஜிபிக்கு, சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

தினத்தந்தி
|
10 July 2023 10:28 AM GMT

பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்குகளில் இருவிரல் பரிசோதனை மேற்கொள்ளப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக டிஜிபிக்கு, சென்னை ஐகோர்ட்டு உத்தரவுவிட்டுள்ளது.

சென்னை,

பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்குகளில் இருவிரல் பரிசோதனை மேற்கொள்ளப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக டிஜிபிக்கு, சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சிதம்பரத்தில் சிறுமிக்கு தாலி கட்டிய விவகாரத்தில் இருவர் மீதும் தவறில்லை என காவல்துறை விளக்கத்தை ஏற்று வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.

தர்மபுரியில் இள வயது திருமணம் தொடர்பான வழக்கில் 17 வயதுக்குட்பட்ட இருவரையும் காவல்துறையினர் நடத்திய விதத்தில் நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். மேலும் இருவரும் 18 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்கும் பட்சத்தில், இருவரையும் குழந்தைகளாக கருத வேண்டும் என்று நீதிபதிகள் கருத்து தெரிவிதுள்ளனர்.

மேலும் செய்திகள்