< Back
மாநில செய்திகள்
அரசு பள்ளியில் செல்பி ஸ்பாட் நிகழ்ச்சி
கரூர்
மாநில செய்திகள்

அரசு பள்ளியில் செல்பி ஸ்பாட் நிகழ்ச்சி

தினத்தந்தி
|
30 Sep 2022 7:29 PM GMT

அரசு பள்ளியில் செல்பி ஸ்பாட் நிகழ்ச்சி நடந்தது.

வெள்ளியணை அரசு தொடக்கப்பள்ளியில் முதல் பருவம் முடிவடைந்தது. இதையடுத்து தமிழக அரசின் புதிய திட்டமான எண்ணும் எழுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக ஆசிரியர்கள் முதல் பருவத்தில் கற்பித்தல் முறைக்கு பயன்படுத்திய துணை கருவிகள் மற்றும் பருவம் முழுவதும் மாணவர்களது படைப்புகள் அனைத்தும் ஒன்று திரட்டி காட்சிப்படுத்தி பார்வைக்கு வைக்கப்பட்டு பார்வையாளர்கள் அவற்றுடன் செல்பி எடுத்துகொள்ளும் செல்பி ஸ்பாட் என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் ஆர்வத்துடன் வந்து செல்பி எடுத்துக்கொண்டனர்.

மேலும் செய்திகள்