< Back
மாநில செய்திகள்
புகையிலை பொருட்கள் பறிமுதல்
அரியலூர்
மாநில செய்திகள்

புகையிலை பொருட்கள் பறிமுதல்

தினத்தந்தி
|
22 July 2023 7:06 PM GMT

புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

விக்கிரமங்கலம்:

அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே கீழநத்தம் கிராம பகுதியில் உள்ள கடைகளில் விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீராசாமி மற்றும் போலீசார் புகையிலை பொருட்கள் விற்கப்படுகிறதா? என்று சோதனை செய்தனர். அப்போது கீழநத்தம் கிராமத்தை சேர்ந்த முத்துகிருஷ்ணன் (வயது 60) என்பவரது பெட்டிக்கடையில் விற்பனை செய்வதற்காக வைத்திருந்த அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து முத்துகிருஷ்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்