< Back
மாநில செய்திகள்
மண் கடத்திய லாரி, பொக்லைன் பறிமுதல்
திருநெல்வேலி
மாநில செய்திகள்

மண் கடத்திய லாரி, பொக்லைன் பறிமுதல்

தினத்தந்தி
|
26 Nov 2022 9:06 PM GMT

மண் கடத்திய லாரி, பொக்லைன் பறிமுதல் செய்யப்பட்டன

களக்காடு:

களக்காடு அருகே ஊச்சிக்குளம் கிராமத்தில் உள்ள குளத்தில் அரசின் அனுமதி இன்றி மண் கடத்தப்படுவதாக களக்காடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனையிட்டனர். அப்போது அங்கு 3 பேர் ெபாக்லைன் எந்திரம் மூலம் லாரியில் குளத்து சரள் மண் கடத்திக் கொண்டிருந்தனர். போலீசாரை பார்த்ததும் 3 பேரும் தப்பி ஓடினர். இதில் போலீசார் விரட்டி சென்று ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த லாரி டிரைவர் துரைராஜ் (வயது 42) என்பதும், தப்பி ஓடியவர்கள் பொக்லைன் டிரைவர் துளசி (30), லாரி உரிமையாளர் மகாராஜன் என்பதும் தெரியவந்தது. பின்னர் மண் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரி, பொக்லைன் எந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார், துரைராஜை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்