< Back
மாநில செய்திகள்
ஜேடர்பாளையம் ராஜா வாய்க்காலில்அடித்து செல்லப்பட்ட வாலிபர்
நாமக்கல்
மாநில செய்திகள்

ஜேடர்பாளையம் ராஜா வாய்க்காலில்அடித்து செல்லப்பட்ட வாலிபர்

தினத்தந்தி
|
7 Oct 2023 6:45 PM GMT

ஜேடர்பாளையம் ராஜா வாய்க்காலில் குளித்தபோது அடித்து செல்லப்பட்ட வாலிபரை தேடும் பணி தீவிரம் நடந்து வருகிறது.

பரமத்திவேலூர்

பரமத்தி வேலூர் தாலுகா, கபிலர்மலை, திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் அஜீத் (வயது 18). கூலித்தொழிலாளி. இவர் தனது நண்பருடன் நேற்று கூலி வேலைக்கு சென்று விட்டு ஜேடர்பாளையம் படுகை அணை பகுதியில் உள்ள ராஜா வாய்க்காலில் குளித்துக் கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அஜித் ஆழமான பகுதியில் சென்று குளித்தபோது எதிர்பாராத விதமாக அவர் ராஜா வாய்க்காலில் அடித்து செல்லப்பட்டார். இதை பார்த்த அங்கு குளித்துக் கொண்டு இருந்தவர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் முடியாததால் ஜேடர்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த போலீசார் மீனவர்கள் உதவியுடன் பரிசல் மூலம் ராஜா வாய்க்காலில் நேற்று மாலை வரை தேடினர். இரவு நேரம் ஆனதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது. இதுகுறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 6 நாட்களுக்கு முன்பு நாமக்கல்லை சேர்ந்த டாஸ்மாக் ஊழியர் ஜெகநாதன் ஜேடர்பாளையம் படுகை அணையில் குளித்தபோது அடித்துச் செல்லப்பட்டார். அவரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் நேற்று ராஜாவாய்க்காலில் அஜித் என்பவர் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்