< Back
மாநில செய்திகள்
இரணியல் அருகேமனைவியை அரிவாளால்வெட்டி கொன்ற கணவர் கைது
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

இரணியல் அருகேமனைவியை அரிவாளால்வெட்டி கொன்ற கணவர் கைது

தினத்தந்தி
|
26 Feb 2023 7:29 PM GMT

இரணியல் அருகே மனைவியை வெட்டி கொன்ற கணவரை போலீசார் கைது செய்தனர். அவர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

திங்கள்சந்தை:

இரணியல் அருகே மனைவியை வெட்டி கொன்ற கணவரை போலீசார் கைது செய்தனர். அவர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

2-வது திருமணம்

இரணியல் அருகே உள்ள குருந்தன்கோடு பகுதிைய சேர்ந்தவர் மேனகா (வயது 39). இவருக்கும் ஏற்கனவே திருமணமாகி 12 வயதில் ஒரு மகள் உண்டு. திருமணமான 3-வது ஆண்டிலேயே கணவர் இறந்து விட்டார்.

இதையடுத்து மேனகா கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திக்கணங்கோடு பகுதியைச் சேர்ந்த ஜெயபால் (45) என்ற ஓட்டல் தொழிலாளியை 2-வது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகன் உண்டு. இந்தநிலையில் கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மேனகா, கணவரை விட்டு பிரிந்த தனது மகள், மகனுடன் குருந்தன்கோட்டில் வசித்து வந்தார்.

அரிவாளால் வெட்டி கொலை

இந்தநிலையில் கடந்த 19-ந்தேதி மேனகா தனது குழந்தைகளுடன் குருந்தன்கோட்டில் உள்ள ஆலயத்துக்கு சென்று திரும்பிய போது அவர்களை ஜெயபால் தடுத்து நிறுத்தி மகனை தன்னுடன் அனுப்புமாறு கூறினார். அதற்கு அவர் மறுத்தால் ஆத்திரமடைந்த ஜெயபால் அரிவாளால் மேனகாவையும், 12 வயது சிறுமியையும் வெட்டிவிட்டு தப்பி சென்றார். இதில் மேகனா பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த சிறுமிக்கு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து இரணியல் போலீசார் ஜெயபால் மீது கொலை வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து அவரை தேடி வந்தனர். இந்தநிலையில் தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சிவசங்கர் மற்றும் ஏட்டுகள் ஸ்டாலின், சுஜின் ஆகியோர் நேற்று திக்கணங்கோடு பகுதியில் ஒரு தோப்பில் மறைந்திருந்த ஜெயபாலை கைது செய்தனர்.

அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-

மகனை பார்க்க மறுத்தார்

எனக்கும் மேனகாவுக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. எங்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் நானும் எனது மனைவியும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்ததால் எனது மகனை பார்க்க வாரந்தோறும் மனைவியின் வீட்டுக்கு செல்வேன்.

கடந்த ஒரு மாத காலமாக எனது மகனை பார்க்க விடாமல் தடுத்தனர். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. பல முறை கூறியும் மகனை பார்க்க விடாமல் தகராறு செய்து வந்ததால் மனைவியை அரிவாளால் வெட்டி கொலை செய்தேன்.

இவ்வாறு அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்