< Back
மாநில செய்திகள்
பால் வியாபாரிக்கு அரிவாள் வெட்டு
மதுரை
மாநில செய்திகள்

பால் வியாபாரிக்கு அரிவாள் வெட்டு

தினத்தந்தி
|
15 July 2023 9:13 PM GMT

பால் வியாபாரிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது

அவனியாபுரம்

அவனியாபுரம் பகுதி திருப்பதி நகரில் வசிப்பவர் மகாமணி(வயது 45). பால் வியாபாரி. இவரது மகன் சோனை முத்து. அதே பகுதியை சேர்ந்தவர் ஜெயசீலன்(24). கடந்த 2 நாட்களுக்கு முன்பு சோனை முத்துவின், செல்போனை ஜெயசீலன் திருடிவிட்டதாக கூறி வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் மோட்டார்சைக்கிளில் வந்த மகாமணியை, ஜெயசீலன், அவருடைய நண்பர்கள் 4 பேர் சேர்ந்து அரிவாளால் வெட்டி விட்டு தப்பினர். இதுகுறித்த புகாரின்பேரில் அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய ஜெயசீலன் மற்றும் அவரது நண்பர்களை தேடி வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்