< Back
மாநில செய்திகள்
மனைவி-மாமியாருக்கு அரிவாள் வெட்டு
மதுரை
மாநில செய்திகள்

மனைவி-மாமியாருக்கு அரிவாள் வெட்டு

தினத்தந்தி
|
15 Sep 2022 8:43 PM GMT

பாலமேடு அருகே மனைவி-மாமியாருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

அலங்காநல்லூர்,

பாலமேடு அருகே வலையபட்டியைச் சேர்ந்தவர் முருகன் (வயது 44). இவரது மனைவி சீலைக்காரி (34). இவர் ராஜாக்கள்பட்டியில் உள்ள தாயார் நல்லதங்காள் (60) வீட்டிற்கு சென்றிருந்தார். இந்நிலையில் முருகன் தனது மனைவியிடம் சென்று தனது ஊருக்கு வருமாறு அழைத்தார். இதில் வாய் தகராறு முற்றியதில் அரிவாளால் முருகன் தனது மனைவி சீலைக்காரியை வெட்டினார். தடுக்க சென்ற மாமியார் நல்லதங்காளுக்கும் வெட்டு விழுந்தது. காயமடைந்த 2 பேரும் மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக பாலமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து முருகனை கைது செய்தனர்.

Related Tags :
மேலும் செய்திகள்