< Back
மாநில செய்திகள்
முதியவருக்கு அரிவாள் வெட்டு:  வாலிபர் கைது
தேனி
மாநில செய்திகள்

முதியவருக்கு அரிவாள் வெட்டு: வாலிபர் கைது

தினத்தந்தி
|
5 Dec 2022 6:45 PM GMT

போடியில் முதியவரை அரிவாளால் வெட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

போடி கருப்பசாமி கோவில் தெருவைச் சேர்ந்தவர் தீபாவளிராஜ் (வயது 60). இவரது மைத்துனர் சுதாகர் (32). இவர்கள் இருவருக்கும் இடையே பணம் கொடுக்கல்-வாங்கல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று மதியம் போடி அருகே உள்ள வினோபாஜி காலனி பகுதியில் தீபாவளிராஜ் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த சுதாகர், அவரை வழிமறித்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

மேலும் சுதாகர் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் வெட்ட முயன்றார். அப்போது அதை தடுக்க முயன்ற தீபாவளிராஜீக்கு 2 கைகளிலும் வெட்டு விழுந்தது. இதில் படுகாயமடைந்த அவர் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அவர் போடி நகர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுதாகரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்