< Back
மாநில செய்திகள்
மேல்மலையனூர் அருகே      பள்ளி மாணவன் மயங்கி விழுந்து சாவு;   விளையாடியபோது பரிதாபம்
விழுப்புரம்
மாநில செய்திகள்

மேல்மலையனூர் அருகே பள்ளி மாணவன் மயங்கி விழுந்து சாவு; விளையாடியபோது பரிதாபம்

தினத்தந்தி
|
20 Sep 2023 6:45 PM GMT

மேல்மலையனூர் அருகே விளையாடிக் கொண்டிருந்த பள்ளி மாணவன் திடீரென மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தான்.

மேல்மலையனூர்,

6-ம் வகுப்பு மாணவன்

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே உள்ள வடுகப்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன். இவருடைய மகன் ஜீவா (வயது 11). அதே ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் ஜீவா நேற்று முன்தினம் மாலை வீட்டின் அருகே உள்ள அம்மன் கோவில் முன்பு விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது அவன் திடீரென மயங்கி கீழே விழுந்து விட்டான். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து ஜீவாவை மீட்டு சிகிச்சைக்காக அவலூர்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அவனை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே ஜீவா இறந்துவிட்டதாக தெரிவித்தார்.

பெற்றோர் கதறல்

இதனிடையே இதுபற்றி தகவல் அறிந்து ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்த அவனது பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஜீவாவின் உடலை பார்த்து கதறி அழுதனர். மேலும் இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் அவலூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜீவா சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். விளையாடிக் கொண்டிருந்த மாணவன் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அக்கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்