< Back
மாநில செய்திகள்
கரூர்
மாநில செய்திகள்
மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி
|26 Sep 2022 6:39 PM GMT
மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.
உலக ஓசோன் தினத்தையொட்டி தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை, தேசிய பசுமை படை சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு பள்ளி தலைமையாசிரியை மெர்சி மார்கிரேட் நிர்மலா தலைமை தாங்கினார். பள்ளி பசுமை படை ஒருங்கிணைப்பாளர் சுமதி பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்து, மரங்களின் அவசியம் குறித்து எடுத்து கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பின்னர் மரங்களை பராமரிப்பது குறித்து அனைவரும் உறுதிமொழி எடுத்து கொண்டனர். இதில், பள்ளி ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் திருமூர்த்தி செய்திருந்தார்.