< Back
மாநில செய்திகள்
திருநெல்வேலி
மாநில செய்திகள்
மரக்கன்றுகள் நடும் விழா
|22 July 2023 9:40 PM GMT
மருதகுளம் நெல்லை பொறியியல் கல்லூரியில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
இட்டமொழி:
மருதகுளம் நெல்லை பொறியியல் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டத்தின் கீழ் கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் எம்.ஜின்னா ஷேக் முகம்மது தலைமை தாங்கினார். மூன்றடைப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரியப்பன், தனிப்பிரிவு காவலர் ஜோன்ஸ் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் கல்லூரி நூலகர் முகமது மைதீன், நிர்வாக அலுவலர் மன்சூர் அலி மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் முஜீப் முகம்மது முஸ்தபா செய்திருந்தார்,