< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்
மரக்கன்றுகள் நடும் விழா
|11 July 2023 8:43 PM GMT
மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
காரியாபட்டி,
காரியாபட்டி பேரூராட்சி சார்பாக கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. விழாவிற்கு காரியாபட்டி பேரூராட்சி தலைவர் செந்தில் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் ரவிக்குமார் முன்னிலை வகித்தார். திருச்சுழி ஒன்றியக்குழு தலைவர் பொன்னுத்தம்பி மரக்கன்றுகளை நட்டு சிறப்புரையாற்றினார். பொதுக்குழு உறுப்பினர் குரண்டி சிவசக்தி, பேரூராட்சி கவுன்சிலர்கள் முனீஸ்வரி இனியவன், முகமது முஸ்தபா, சரஸ்வதி பாண்டியராஜன், சங்கரேஸ்வரன் மற்றும் பலர் விழாவில் கலந்து கொண்டனர்.