< Back
மாநில செய்திகள்
நகராட்சி அலுவலகம் முன் தூய்மை பணியாளர்கள் தர்ணா
அரியலூர்
மாநில செய்திகள்

நகராட்சி அலுவலகம் முன் தூய்மை பணியாளர்கள் தர்ணா

தினத்தந்தி
|
14 April 2023 6:42 PM GMT

நகராட்சி அலுவலகம் முன் தூய்மை பணியாளர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

அரியலூர் நகராட்சி அலுவலகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வருகின்றனர். அவர்களுக்கு மாதாந்திர சம்பளம் குறிப்பிட்ட காலத்தில் சரியாக வழங்கப்படுவதில்லை என்றும், ஒவ்வொரு முறையும் இவர்கள் நிர்வாகத்தினருடன் பேசி அல்லது போராட்டங்கள் நடத்தி ஊதியத்தை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது.இந்நிலையில் கடந்த 2 மாதங்களாக அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படாததால் நேற்று பணிகளை புறக்கணித்து, அரியலூர் நகராட்சி அலுவலகத்தின் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். இதையடுத்து அங்கு வந்த அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, வங்கி விடுமுறைக்கு பின்பு சரியான முறையில் ஊதியம் வழங்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர்.

மேலும் செய்திகள்