< Back
மாநில செய்திகள்
திருவாரூர்
மாநில செய்திகள்
சர்வசித்தி ஆஞ்சநேயருக்கு சந்தனக்காப்பு அலங்காரம்
|19 April 2023 6:45 PM GMT
சர்வசித்தி ஆஞ்சநேயருக்கு சந்தனக்காப்பு அலங்காரம்
திருவாரூர் மாவட்டம் செம்படவன்காடு கிராமத்தில் அமைந்துள்ள சர்வசித்தி ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று சித்திரை மாத அமாவாசையையொட்டி சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. முன்னதாக ஆஞ்சநேயருக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், நெய், தேன், மஞ்சள் பொடி உள்ளிட்டவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து ஆஞ்சநேயருக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.