< Back
தமிழக செய்திகள்

சிவகங்கை
தமிழக செய்திகள்
மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்

15 Dec 2022 12:15 AM IST
மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.
காரைக்குடி,
சோமநாதபுரம் போலீஸ் சரகம் மணப்பட்டி ஆற்றில் உரிய அனுமதியின்றி சட்டவிரோதமாக டிராக்டரில் சிலர் மணல் அள்ளி கொண்டிருந்தனர். இது குறித்த தகவலறிந்த போலீசார் அங்கு ரோந்து சென்றனர். போலீசாரை கண்டதும் மணல் கடத்திய 3 பேர் டிராக்டரையும், 2 மோட்டார்சைக்கிள்களையும் அங்கேயே விட்டு விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து டிராக்டர் மற்றும் மோட்டார்சைக்கிள்களை பறிமுதல் செய்த போலீசார் தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர்.