< Back
மாநில செய்திகள்
கல்லூரியில் சனாதன சர்ச்சை - சென்னை ஐகோர்ட்டு நீதிபதி பரபரப்பு கருத்து
மாநில செய்திகள்

கல்லூரியில் சனாதன சர்ச்சை - சென்னை ஐகோர்ட்டு நீதிபதி பரபரப்பு கருத்து

தினத்தந்தி
|
16 Sep 2023 10:23 AM GMT

அரசு கலைக்கல்லூரியில் சனாதன தர்மத்திற்கு எதிரான கருத்துக்களை பகிரும் வகையில் சுற்றறிக்கை வெளியிடப்பட்டதற்கு எதிரான வழக்கை, நீதிபதி சேஷசாயி விசாரித்து முடித்து வைத்தார்.

சென்னை,

மத பழக்க வழக்கங்களில் மோசமான நடைமுறைகள் புழக்கத்தில் இருந்தாலும் அவற்றை களையெடுக்க வேண்டுமே தவிர, அதற்காக பயிரை ஏன் வேரறுக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு நீதிபதி சேஷசாயி கேள்வி எழுப்பி உள்ளார்.

திருவாரூர் அரசு கலைக்கல்லூரியில் சனாதன தர்மத்திற்கு எதிரான கருத்துக்களை பகிரும் வகையில் சுற்றறிக்கை வெளியிடப்பட்டதற்கு எதிரான வழக்கை, நீதிபதி சேஷசாயி விசாரித்து முடித்து வைத்தார். அப்பொழுது சனாதன தர்மம் என்பது இந்துக்களின் நித்திய கடமைகள், தேசத்துக்கான கடமை, பெற்றோருக்கு செய்ய வேண்டிய கடமை உள்ளிட்ட கடமைகளின் தொகுப்பு என்று நீதிபதி சேஷசாயி விளக்கம் அளித்தார்.

மேலும் அவர், இந்த கடமைகள் அழிக்கத்தக்கவையா? குடிமகன் நாட்டை நேசிக்கக் கூடாதா? நாட்டுக்கு சேவையாற்றுவது கடமை இல்லையா? பெற்றோரை பராமரிக்க வேண்டியது கடமை இல்லையா? சனாதனம் சாதியவாதத்தையும் தீண்டாமையையும் ஊக்குவிப்பதாக ஒரு கருத்து நிலவுகிறது. நாட்டில் தீண்டாமையை சகித்துக் கொள்ள முடியாது. அனைத்து குடிமக்களும் சமமானவர்கள்.

மத பழக்க வழக்கங்களில் சில மோசமான நடைமுறைகள் தெரியாமல் புழக்கத்தில் இருக்கலாம். அவற்றை களையெடுக்க வேண்டுமே தவிர, அதற்காக பயிரை ஏன் வேரறுக்க வேண்டும். ஒவ்வொரு மதமும் நம்பிக்கைகளின் அடிப்படையில் தோற்றுவிக்கப்பட்டவை. கருத்து சுதந்திரம் என்ற பெயரில் மற்றொருவரை காயப்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்று கூறினார்.

மேலும் செய்திகள்