< Back
மாநில செய்திகள்

திருச்சி
மாநில செய்திகள்
யானை வாகனத்தில் எழுந்தருளிய சமயபுரம் மாரியம்மன்

22 Aug 2022 1:28 AM IST
சமயபுரம் மாரியம்மன் யானை வாகனத்தில் எழுந்தருளினார்.
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். அதன்படி நேற்று ஆஸ்தான மண்டபத்தில் மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது. பின்னர் யானை வாகனத்தில் அம்மன் எழுந்தருளி கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை பயபக்தியுடன் வணங்கினர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் கல்யாணி மேற்பார்வையில் மணியக்காரர் பழனிவேல், கோவில் குருக்கள் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.