< Back
மாநில செய்திகள்
ஈரோடு
மாநில செய்திகள்
17 கோவில்களில் சமபந்தி விருந்து
|15 Aug 2023 10:33 PM GMT
17 கோவில்களில் சமபந்தி விருந்து நடந்தது.
சுதந்திர தின விழாவையொட்டி இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோவில்களில் சமபந்தி விருந்து நடத்தப்பட்டது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் பண்ணாரி மாரியம்மன், கொடுமுடி மகுடேஸ்வரர், பவானி சங்கமேஸ்வரர், ஈரோடு கொங்காலம்மன், பெரிய மாரியம்மன், ஆருத்ர கபாலீஸ்வரர், சென்னிமலை சுப்பிரமணிய சாமி, திண்டல் வேலாயுத சாமி, அந்தியூர் செல்லீஸ்வரர், சத்தியமங்கலம் வேணுகோபாலசாமி, கோபி பச்சமலை சுப்பிரமணியசாமி, பவளமலை முத்துகுமாரசாமி உள்பட மொத்தம் 17 கோவில்களில் நேற்று மதியம் சமபந்தி விருந்து நடந்தது.