< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்
ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் வேலை நிறுத்த போராட்டம்
|23 Nov 2022 8:24 PM GMT
ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி அலுவலர் சங்கத்தினர் மாநிலம் முழுவதும் நேற்று 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி 2 நாட்கள் சிறு விடுப்பு எடுத்து வேலை நிறுத்தம் செய்யும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பஞ்சாயத்து செயலாளர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் மற்றும் பணப்பலன்களை வழங்க வேண்டும் என்பது உள்பட 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. மாவட்டத்தில் மொத்தம் 860 அலுவலர்களில் 485 பேர் போராட்டத்தில் பங்கேற்றனர். இதனால் ஊரக வளர்ச்சித்துறை அலுவலகங்களில் பணி பாதிப்பு ஏற்பட்டது.