< Back
மாநில செய்திகள்
அடகு கடை உரிமையாளரிடம் ரூ.2 லட்சம் திருட்டு
மயிலாடுதுறை
மாநில செய்திகள்

அடகு கடை உரிமையாளரிடம் ரூ.2 லட்சம் திருட்டு

தினத்தந்தி
|
24 Aug 2022 5:10 PM GMT

சீர்காழியில் அடகு கடை உரிமையாளரிடம் ரூ.2 லட்சம் திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

சீர்காழி;

சீர்காழியில் அடகு கடை உரிமையாளரிடம் ரூ.2 லட்சம் திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

ரூ.2 லட்சம் திருட்டு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை சேர்ந்தவர் பாபுலால். இவருடைய மகன் ராகேஷ்குமார் (வயது28). அடகு கடை உரிமையாளரான இவர் நேற்று சீர்காழியில் உள்ள ஒரு தனியார் வங்கியில் ரூ.2 லட்சத்தை எடுத்து தனது இருசக்கர வாகனத்தில் சீட்டுக்கு அடியில் வைத்து பூட்டினார். பின்னர் அவர் அங்கிருந்து புறப்பட்டு, பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள கடைக்கு சென்று வாசலில் வாகனத்தை நிறுத்திவிட்டு ரூ.1000-த்துக்கு சில்லரை வாங்க சென்றார். அப்போது 2 பைக்கில் ராகேஷ்குமாரை பின் தொடர்ந்து முகமூடி அணிந்து வந்த 3 போ் சீட்டுக்கு அடியில் இருந்த ரூ.2 லட்சத்தை திருடி சென்று விட்டனர்.

விசாரணை

இதன்பின் சில்லரை வாங்கிக்கொண்டு ராகேஷ்குமார் திரும்பிவந்து பார்த்தபோது இருசக்கர வாகனத்தின் சீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு ரூ.2 லட்சத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் சீர்காழி போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் மூலம் பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்