< Back
மாநில செய்திகள்
ரூ.3 லட்சம் பட்டாசுகள் பறிமுதல்
விருதுநகர்
மாநில செய்திகள்

ரூ.3 லட்சம் பட்டாசுகள் பறிமுதல்

தினத்தந்தி
|
30 Aug 2022 9:13 PM GMT

சிவகாசியில் ரூ.3 லட்சம் பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

சிவகாசி,

சிவகாசி முத்தாட்சி மடத்தில் உள்ள ஒரு குடோனில் சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் வகையில் ஆட்கள் நடமாட்டம் அதிகம் இருப்பதாக சிவகாசி கிழக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிராஜுதீனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதை தொடர்ந்து அவர் சம்பவ இடத்துக்கு சென்றுள்ளார். அப்போது அந்த குடோனில் உரிய அனுமதியின்றி விதிகளை மீறி பேன்சிரக பட்டாசுகள் தயாரித்தது கண்டுபிடிக்கப்பட்டது. போன்சிர பட்டாசுகளை ஆலையில் தயாரிக்கும்போதே விபத்து ஏற்பட வாய்ப்பு இருப்பதால் மிகவும் கவனமாக தயாரிக்கப்படும் சூழ்நிலையில் போதிய வசதிகள் இல்லாமல் குடோனில் பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டதை கண்டு போலீஸ் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அங்கிருந்த ரூ.3 லட்சம் மதிப்புள்ள பேன்சிரக பட்டாசுகளை போலீசார் பறிமுதல் செய்ததுடன் யோகராஜ் (வயது48), செல்வக்குமார் (22) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.


மேலும் செய்திகள்