< Back
மாநில செய்திகள்
கிராம நிர்வாக அலுவலர் வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.4 லட்சம் மோசடி
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

கிராம நிர்வாக அலுவலர் வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.4 லட்சம் மோசடி

தினத்தந்தி
|
21 May 2022 6:47 PM GMT

கிராம நிர்வாக அலுவலர் வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.4 லட்சம் மோசடி செய்தவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

விராலிமலை,

விராலிமலை தெற்குதெருவை சேர்ந்தவர் கண்ணதாசன் (வயது 65), சலவை தொழிலாளி. இவரது மகனை டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் தேர்ச்சி பெற வைத்து கிராம நிர்வாக அலுவலர் வேலை வாங்கி தருவதாக கூறி விராலிமலை சக்தி நகரை சேர்ந்த சுப்பிரமணி என்பவர் கண்ணதாசனிடமிருந்து ரூ.4 லட்சம் பெற்றுக்கொண்டு இதுநாள்வரை வேலை வாங்கித்தராமல் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து விராலிமலை போலீஸ் நிலையத்தில் கண்ணதாசன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்