< Back
மாநில செய்திகள்
வெளிநாட்டு ஓட்டலை குத்தகைக்கு தருவதாக கூறி ரூ.30 லட்சம் மோசடி
விருதுநகர்
மாநில செய்திகள்

வெளிநாட்டு ஓட்டலை குத்தகைக்கு தருவதாக கூறி ரூ.30 லட்சம் மோசடி

தினத்தந்தி
|
25 Feb 2023 6:50 PM GMT

ரூ.30 லட்சம் மோசடி செய்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


அருப்புக்கோட்டை நாராயணசாமி தெருவை சேர்ந்தவர் சுப்புராஜ் (வயது 62). இவருடைய மருமகன் மணிகண்டன். இவர் எம்.பி.ஏ. முடித்துவிட்டு ஓசூரில் உள்ள ஓட்டலில் வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் சுப்புராஜுக்கு மதுரை அழகப்பா நகரை சேர்ந்த நாராயணசாமி, அவரது மனைவி சிவா என்ற கங்கா தேவி (56), இவர்களது மகன் ஸ்ரீராமர் (36) ஆகியோரின் அறிமுகம் கிடைத்தது. இவர்கள் 3 பேரும் தாங்கள் துபாயில் ஓட்டல் நடத்தி வருவதாக தெரிவித்துள்ளார்கள். மேலும் அந்த ஓட்டலை மணிகண்டனுக்கு குத்தகைக்கு தருவதாகவும், அங்கேயே தங்கி தொழில் செய்ய விசா பெற்றுதருவதாகவும் அதற்கு ரூ.30 லட்சம் தருமாறும் கேட்டுள்ளனர். இதனை நம்பிய சுப்பு ராஜ் அவர்களது வங்கி கணக்குக்கு ரூ.30 லட்சத்தை கடந்த 2018-ல் அனுப்பி உள்ளார். ஆனால் அவர்கள் ஓட்டலை குத்தகைக்கு தராமலும், பணத்தை திருப்பி தராமலும் மோசடி செய்தது தெரியவந்தது. இது தொடர்பாக சுப்புராஜ் விருதுநகர் மாஜிஸ்திரேட் மற்றும் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்த நிலையில் கோர்ட்டு உத்தரவுகளின் படி விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், நாராயணசாமி உட்பட 3 பேர் மீதும் மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Tags :
மேலும் செய்திகள்