< Back
மாநில செய்திகள்
வேலை வாங்கி தருவதாக ரூ.2 லட்சம் மோசடி
விருதுநகர்
மாநில செய்திகள்

வேலை வாங்கி தருவதாக ரூ.2 லட்சம் மோசடி

தினத்தந்தி
|
12 Dec 2022 6:56 PM GMT

ராஜபாளையத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.2 லட்சம் மோசடி செய்தனர்.

ராஜபாளையம்,

தென்காசி மாவட்டம் மாங்குடி பகுதியை சேர்ந்தவர் தாமோதரன். இவரிடம் ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரத்தை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் சப்- கலெக்டர் வேலை பார்த்து வருவதாக கூறி பழகி வந்துள்ளார். இந்தநிலையில் தனது நண்பர் மாசிலாமணி என்பவர் மூலமாக தாமோதரனின் பேரன் சதீஷ்குமார் என்பவருக்கு ரெயில்வே வேலை வாங்கித்தருவதாக கூறி கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.2 லட்சம் செந்தில்குமார் வாங்கி உள்ளார். ஆனால் இதுவரை வேலை வாங்கி தரவில்லை. பணத்தையும் திரும்ப தரவில்லை. இது தொடர்பாக ராஜபாளையம் குற்றவியல் நீதிமன்றத்தில் தாமோதரன் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து நீதிமன்ற உத்தரவின் பேரில் செந்தில்குமார், மாசிலாமணி ஆகியோர் மீது தளவாய்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
மேலும் செய்திகள்