< Back
மாநில செய்திகள்
ஓய்வு பெற்ற நர்சு தீக்குளிப்பு
திருச்சி
மாநில செய்திகள்

ஓய்வு பெற்ற நர்சு தீக்குளிப்பு

தினத்தந்தி
|
26 May 2022 9:33 PM GMT

ஓய்வு பெற்ற நர்சு தீக்குளித்தார்.

திருச்சி:

திருச்சி எடமலைப்பட்டிபுதூர் பாரதி தெரு பகுதியை சேர்ந்தவர் ஹெலன் காந்தகுமாரி (வயது 74). இவர் அரசு ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர், நீண்ட நாட்களாக காசநோய் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்தார். தொடர் சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை. இதனால் விரக்தி உடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாதநேரத்தில் மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். வலி தாங்க முடியாமல் அலறி துடித்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு ஹெலன் காந்தகுமாரிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து எடமலைப்பட்டிபுதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்