< Back
மாநில செய்திகள்
ஓய்வுபெற்ற வங்கி ஊழியர் திடீர் சாவு
விருதுநகர்
மாநில செய்திகள்

ஓய்வுபெற்ற வங்கி ஊழியர் திடீர் சாவு

தினத்தந்தி
|
24 Sep 2023 9:30 PM GMT

ஓய்வுபெற்ற வங்கி ஊழியர் திடீரென இறந்தார்.

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டை அஜீஸ் நகரை சேர்ந்தவர் நாகப்பன் (வயது 63). ஓய்வு பெற்ற வங்கி ஊழியரான இவர் வீட்டை சுத்தம் செய்ய நாற்காலியின் மீது ஏறினார். அப்போது திடீரென அவர் தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்ததாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த நாகப்பனை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிக்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்