< Back
மாநில செய்திகள்

அரியலூர்
மாநில செய்திகள்
கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு மீட்பு

27 Jan 2023 12:08 AM IST
கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு மீட்கப்பட்டது.
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள இரும்புலிக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் அன்பு. இவருக்கு சொந்தமான பசுமாடு 20 அடி ஆழமுள்ள கிணற்றில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த செந்துறை தீயணைப்பு வீரர் அழகானந்தம் தலைமையில் மணிவண்ணன், தயாநிதி, சதீஷ் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் கயிறு மூலம் பசுமாட்டை கட்டி உயிருடன் மீட்டு அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.