< Back
மாநில செய்திகள்
ஆவுடையார்கோவிலில் விவசாயி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

ஆவுடையார்கோவிலில் விவசாயி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

தினத்தந்தி
|
6 Sep 2023 7:07 PM GMT

ஆவுடையார்கோவிலில் விவசாயி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

ஆவுடையாஆவுடையார்கோவில் அருகே கரூரை சேர்ந்தவர் சேவுகபெருமாள் (வயது 52). விவசாயி. இவர், கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ஆவுடையார்கோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சேவுகபெருமாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆவுடையார்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து விபத்துக்கு காரணமான நபரை கைது செய்ய வேண்டும் என்று கூறி சேவுகபெருமாள் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் ஆவுடையார்கோவில் பழைய தாலுகா அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு வந்த அறந்தாங்கி துணை போலீஸ் சூப்பிரண்டு சண்முகசுந்தரம் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் பொதுமக்கள் நாளை (அதாவது இன்று) மீண்டும் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக கூறி அவர்கள் அங்கிருந்து சென்றனர்.

மேலும் செய்திகள்