< Back
மாநில செய்திகள்
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு 30,000 கனஅடியாக குறைப்பு
மாநில செய்திகள்

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு 30,000 கனஅடியாக குறைப்பு

தினத்தந்தி
|
13 Aug 2024 2:23 PM GMT

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு 30,000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.

சேலம்,

கேரள, கர்நாடக மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்தது. இதனால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பி உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. நீர்வரத்து படிப்படியாக அதிகரித்ததால் கடந்த 30-ந் தேதி மாலை மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டி நிரம்பியது. அணைக்கு வந்த உபரிநீர் 16 கண் மதகுகள் வழியாக திறந்து விடப்பட்டது.

அணைக்கு வரும் தண்ணீரை விட பாசனத்துக்கு திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு அதிகமாக இருந்ததால் நீர்மட்டம் குறைய தொடங்கியது. இதற்கிடையே கர்நாடக மாநிலத்தில் மீண்டும் மழை பெய்ததால் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு மீண்டும் அதிகரிக்கப்பட்டது. இதன் எதிரொலியாக மேட்டூர் அணைக்கு நேற்று நீர்வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக மேட்டூர் அணையில் இருந்து நேற்று மாலை வினாடிக்கு 36 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

இந்த நிலையில், இன்று மாலை நிலவரப்படி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு வினாடிக்கு 35,000 கனஅடியில் இருந்து 30,000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. டெல்டா பாசனத்துக்காக வினாடிக்கு 21,500 கனஅடி நீரும் 16 கண் மதகு வழியாக 8,500 கனஅடி நீரும் திறக்கப்பட்டுள்ளது. கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் மூலம் வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

மேலும் செய்திகள்