< Back
மாநில செய்திகள்
விடுதி துப்புரவு பணியாளர்களுக்கு பணி நியமன ஆணை
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்

விடுதி துப்புரவு பணியாளர்களுக்கு பணி நியமன ஆணை

தினத்தந்தி
|
1 Nov 2022 9:43 AM GMT

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் சார்பில் 7 விடுதி துப்புரவு பணியாளர்களுக்கான பணி நியமன ஆணையை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலக மக்கள் நல்லுறவு மையத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து 280 மனுக்களை பெற்று அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அரசு துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

கூட்டத்திற்கு முன்னதாக மறைந்த சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாளை முன்னிட்டு ஒற்றுமை நாள் உறுதிமொழி மற்றும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு வாரத்தையொட்டிய உறுதிமொழியினை மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தலைமையில் அனைத்து அலுவலர்களும் ஏற்றுக் கொண்டனர்.

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் சார்பில் 7 விடுதி துப்புரவு பணியாளர்களுக்கான பணி நியமன ஆணையை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் கோ.சிவருத்ரய்யா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ரவிச்சந்திரன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) புண்ணியகோட்டி, துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சுமதி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்