< Back
மாநில செய்திகள்
அழுகிய நிலையில் தொழிலாளி உடல் மீட்பு
விருதுநகர்
மாநில செய்திகள்

அழுகிய நிலையில் தொழிலாளி உடல் மீட்பு

தினத்தந்தி
|
15 Sep 2022 7:53 PM GMT

ராஜபாளையத்தில் அழுகிய நிலையில் தொழிலாளி உடல் மீட்கப்பட்டது.

ராஜபாளையம்,

ராஜபாளையம் அருகே உள்ள மில் கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் பாபு (வயது 34). இவர் அதே பகுதியில் மில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இவரது வீட்டில் தங்கை லட்சுமி பிரபா வந்து பார்த்தபோது வீடு பூட்டி இருந்ததுடன், அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசியது. உடனே அவர் இதுகுறித்து உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் அவர்கள் வந்து பார்த்தபோது அழுகிய நிலையில் தூக்கில் தொங்கியபடி பாஸ்கர் பாபு இருந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாஸ்கர்பாபுவின் உடலை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் செய்திகள்