ஈரோடு
பர்கூர் ஈரெட்டியில் தொடர் மழை: அருவியில் வெள்ளப்பெருக்கு
|பர்கூர் ஈரெட்டியில் தொடர் மழை காரணமாக அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
அந்தியூர்
பர்கூர் ஈரெட்டியில் தொடர் மழை காரணமாக அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
அருவி
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பகுதி ஈரெட்டியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதேபோல் நேற்று முன்தினம் இரவும் மழை பெய்தது.
ஈரெட்டியில் அருவி உள்ளது. இது சுமார் 100 அடி உயரமாகும். இதில் எப்போதும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வரும். கோடை காலங்களில் குறைவாகவும், மழை காலங்களில் அதிகமாகவும் தண்ணீர் விழும்.
வெள்ளப்பெருக்கு
தற்போது தொடர் மழை காரணமாக அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மேலும் பர்கூர் மலைப்பகுதியில் காய்ந்து கிடந்த மரம் செடி, கொடிகள் துளிர்விட தொடங்கியுள்ளது. நன்கு வளர்ந்து எங்கு நோக்கிலும் பசுமையாக காணப்படுகின்றன. இவற்றை பார்ப்பதற்காக சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.