< Back
மாநில செய்திகள்
ராசிபுரத்தில் அதிகபட்சமாக 52 மி.மீட்டர் மழைபதிவு
நாமக்கல்
மாநில செய்திகள்

ராசிபுரத்தில் அதிகபட்சமாக 52 மி.மீட்டர் மழைபதிவு

தினத்தந்தி
|
7 Jun 2022 3:32 PM GMT

ராசிபுரத்தில் அதிகபட்சமாக 52 மி.மீட்டர் மழைபதிவு

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவும் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. அதிகபட்சமாக ராசிபுரம் பகுதியில் 52 மி.மீட்டர் மழை பெய்தது. நேற்று காலை 7 மணி நிலவரப்படி மாவட்டத்தில் பதிவான மழை அளவு மி.மீட்டரில் வருமாறு :-

ராசிபுரம்-52, மங்களபுரம்-31, புதுச்சத்திரம்-17, கலெக்டர் அலுவலகம்-12, மோகனூர் -11, நாமக்கல்-9, கொல்லிமலை-5, சேந்தமங்கலம்-4, குமாரபாளையம்-2, திருச்செங்கோடு-1. மாவட்டத்தின் மொத்த மழைஅளவு 144 மி.மீட்டர் ஆகும். தொடர் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை காணப்படுவதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

மேலும் செய்திகள்