< Back
மாநில செய்திகள்
வெண்ணந்தூரில் சாரல் மழை
நாமக்கல்
மாநில செய்திகள்

வெண்ணந்தூரில் சாரல் மழை

தினத்தந்தி
|
24 July 2023 7:00 PM GMT

வெண்ணந்தூர்:

வெண்ணந்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை விட்டுவிட்டு சாரல் மழை பெய்தது. அவ்வப்போது காற்றும் வீசியது. சாரல் மழை, மிதமான காற்று காரணமாக குளிா்ச்சியான சூழல் நிலவியது. இதனால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைவாகவே இருந்தது. சாரல் மழை, குளிா் காரணமாக மாலையில் பள்ளி, கல்லூரி சென்று வீடு திரும்பும் மாணவா்கள் அவதியடைந்தனர். இந்த மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மேலும் செய்திகள்