< Back
மாநில செய்திகள்
மருத்துவ விடுப்பில் இருந்த ரெயில்வே போலீஸ்காரர் சாவு
கரூர்
மாநில செய்திகள்

மருத்துவ விடுப்பில் இருந்த ரெயில்வே போலீஸ்காரர் சாவு

தினத்தந்தி
|
31 Aug 2023 6:42 PM GMT

கரூர் அருகே மருத்துவ விடுப்பில் இருந்த ரெயில்வே போலீஸ்காரர் இறந்தார்.

ரெயில்வே போலீஸ்காரர் சாவு

சேலம் மாவட்டம், சங்ககிரியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 54). இவர் கரூர் ெரயில்வேயில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். இதனால் சுப்பிரமணியன் கரூர் ரெயில்வே காலனியில் உள்ள வீட்டில் தங்கி இருந்து பணிக்கு சென்று வந்தார். இந்நிலையில் கடந்த 6 மாதமாக சுப்பிரமணியன் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவ விடுப்பில் வீட்டில் இருந்து வந்தார். நேற்று முன்தினம் சுப்பிரமணியன் கரூர் அண்ணா வளைவு அருகே இறந்து கிடந்தார்.

வழக்கு

இதுகுறித்து தகவல் அறிந்த கரூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் சுப்பிரமணியன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் காந்தி கிராமத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து சுப்பிரமணியன் எப்படி இறந்தார் என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவ விடுப்பில் இருந்த ரெயில்வே போலீஸ்காரர் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
மேலும் செய்திகள்