< Back
மாநில செய்திகள்
பள்ளி மாணவர்களுக்கு வினாடி-வினா போட்டி
பெரம்பலூர்
மாநில செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு வினாடி-வினா போட்டி

தினத்தந்தி
|
6 July 2023 6:45 PM GMT

பள்ளி மாணவர்களுக்கு வினாடி-வினா போட்டி நடைபெற்றது.

இந்திய ரிசர்வ் வங்கியின் ஆலோசனையின்படி பெரம்பலூர் முன்னோடி வங்கியின் வழிகாட்டுதலின் பேரில் வேப்பந்தட்டை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் சார்பில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இடையேயான நிதி சார்ந்த விழிப்புணர்வு வினாடி-வினா போட்டி வேப்பந்தட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வேப்பந்தட்டை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர் ரங்கநாதபிரபு தலைமை தாங்கினார். துணை மேலாளர் விஜயகுமார் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் வேப்பந்தட்டை வட்டாரத்திலுள்ள அனைத்து அரசு பள்ளிகளில் இருந்தும் 8, 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவ- மாணவிகள் வினாடி-வினா போட்டியில் கலந்து கொண்டனர். இந்தப் போட்டியில் வாலிகண்டபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி முதலிடத்தையும், வேப்பந்தட்டை அரசு பள்ளி 2-ம் இடத்தையும், மேட்டுப்பாளையம் பள்ளி 3-ம் இடத்தையும் பிடித்தது. முதல் 3 இடம் பிடித்த பள்ளியின் மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் வினாடி-வினா போட்டியில் கலந்து கொண்ட அனைத்து பள்ளி மாணவ-மாணவிகளுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் சரஸ்வதி மற்றும் வங்கி ஊழியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்