< Back
மாநில செய்திகள்
ஜெயங்கொண்டம் அரசு கலைக்கல்லூரி மாணவர்களுக்கு புத்தொளி பயிற்சி
அரியலூர்
மாநில செய்திகள்

ஜெயங்கொண்டம் அரசு கலைக்கல்லூரி மாணவர்களுக்கு புத்தொளி பயிற்சி

தினத்தந்தி
|
25 Aug 2022 6:59 PM GMT

ஜெயங்கொண்டம் அரசு கலைக்கல்லூரி மாணவர்களுக்கு புத்தொளி பயிற்சி அளிக்கப்பட்டது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2022-23-ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை கணிதம் நீங்களாக அனைத்து துறைகளிலும் நிறைவு பெற்றது. இதையடுத்து கடந்த 24-ந் தேதி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் ெதாடங்கின. இதையடுத்து, முதலாம் ஆண்டில் சேர்ந்துள்ள 247 மாணவ-மாணவிகளுக்கு புத்தொளி பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் கல்லூரி முதல்வர் கலைச்செல்வி தலைமை தாங்கி கல்வியின் முக்கியத்துவம், நேர மேலாண்மை, ஆளுமை திறன் குறித்து விளக்கி கூறினார். முன்னதாக இணை பேராசிரியர் ராஜமூர்த்தி வரவேற்றார். முடிவில் பேராசிரியர் கோடித்துரை நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்