< Back
மாநில செய்திகள்
விழுப்புரம்
மாநில செய்திகள்
கிருபாபுரீஸ்வரர் கோவிலில் புட்டுக்கு மண் சுமந்த ஐதீக நிகழ்ச்சி
|5 Sep 2022 6:01 PM GMT
திருவெண்ணெய்நல்லூர் கிருபாபுரீஸ்வரர் கோவிலில் புட்டுக்கு மண் சுமந்த ஐதீக நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவெண்ணெய்நல்லூர்,
திருவெண்ணெய்நல்லூரில் மிகவும் பழமை வாய்ந்த மங்களாம்பிகை சமேத கிருபாபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சிவபெருமான் புட்டுக்கு மண் சுமந்த ஐதீக நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. இதையடுத்து சிறப்பு அலங்காரத்தில் கிருபாபுரீஸ்வரர், மங்களாம்பிகை சாமிகள் மாட வீதிகள் வழியாக ஊர்வலமாக திருவெண்ணெய்நல்லூர் மலட்டாறு கரைக்கு சென்றனர். அங்கு சிவபெருமான் புட்டுக்கு மண் சுமந்த ஐதீக நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.