< Back
மாநில செய்திகள்
பொதுமக்கள் சாலை மறியல்
திருவண்ணாமலை
மாநில செய்திகள்

பொதுமக்கள் சாலை மறியல்

தினத்தந்தி
|
18 May 2023 11:39 AM GMT

வந்தவாசி அருகே பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வந்தவாசி

தமிழக அரசு ஊரக வாழ்வாதார இயக்க திட்டத்தின் கீழ் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல், மகளிர் மேம்பாட்டு உள்ளிட்டவைக்காக வந்தவாசி ஒன்றியத்துக்கு உள்பட்ட கல்லாங்குத்து ஊராட்சியில் பயனாளிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இந்த பட்டியலில் பயனாளிகளை ஊராட்சி நிர்வாகம் முறைகேடாக தேர்வு செய்வதாக புகார் தெரிவித்து அந்த கிராமத்தில் பொதுமக்கள் இன்று திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது இதுகுறித்து கடந்த 15-ந் தேதி வந்தவாசி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் புகார் தெரிவித்தும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கிராம மக்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த கீழ்கொடுங்காலூர் போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக சமரசம் செய்ததையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இந்த போராட்டத்தால் வந்தவாசி- மேல்மருவத்தூர் சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Tags :
மேலும் செய்திகள்