< Back
மாநில செய்திகள்
குளத்தை தூர்வார கோரி பொதுமக்கள் மறியல்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

குளத்தை தூர்வார கோரி பொதுமக்கள் மறியல்

தினத்தந்தி
|
10 Oct 2023 7:08 PM GMT

குளத்தை தூர்வார கோரி மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் 20 பேர் கைது செய்யப்பட்டனர்.

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் கோவில் அருகே உள்ள பெரிய குளத்தை தூர்வார பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. இந்த நிலையில் குளத்தை முறையாக தூர்வார கோரியும், அசுத்தம் கலக்காத வகையில் நடவடிக்கை எடுக்கவும், குளத்தின் மையப்பகுதியில் உள்ள தூண்களை பராமரிக்கவும் கோரி அப்பகுதியினர் பல்வேறு போராட்டங்களை அவ்வப்போது நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கோரிக்கையை வலியுறுத்தி நேற்று திருக்கோகர்ணத்தில் அரசு அருங்காட்சியகம் அருகே பொதுமக்கள் சார்பில் சாலை மறியல் நடைபெற்றது. இதில் மறியலில் ஈடுபட்ட 20 பேரை போலீசார் கைது செய்தனர். கைதானவர்கள் அருகில் உள்ள மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்