< Back
மாநில செய்திகள்
நுகர்வோர் பாதுகாப்பு துறை சம்பந்தமான பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டம்; இன்று நடக்கிறது
அரியலூர்
மாநில செய்திகள்

நுகர்வோர் பாதுகாப்பு துறை சம்பந்தமான பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டம்; இன்று நடக்கிறது

தினத்தந்தி
|
8 July 2022 7:17 PM GMT

நுகர்வோர் பாதுகாப்பு துறை சம்பந்தமான பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டம் இன்று நடக்கிறது.

அரியலூர் மாவட்டத்தில் பொது வினியோக திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சம்பந்தமான பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டம் இன்று (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை கீழ்கண்ட கிராமங்களில் நடைபெற உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

அரியலூர் தாலுகாவில் கோவில் எசனை மேற்கு கிராமத்தில் சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் தலைமையிலும், உடையார்பாளையம் தாலுகாவில் தேவாமங்கலம் கிராமத்தில் பொது வினியோக திட்ட துணை பதிவாளர் தலைமையிலும், செந்துறை தாலுகாவில் உஞ்சனி கிராமத்தில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் தலைமையிலும், ஆண்டிமடம் தாலுகாவில் சிலம்பூர் தெற்கு கிராமத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் தலைமையிலும் நடைபெறவுள்ளது.

மேற்கண்ட கூட்டத்தினை, சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் முன்னின்று நடத்துவார்கள். அக்கூட்டத்தில், கூட்டுறவு துறையை சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொள்வார்கள். எனவே, இக்கூட்டத்தில் ரேஷன் கடைகள் தொடர்பான குறைகளை தெரிவித்தும், மின்னணு குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், செல்போன் எண் பதிவு மாற்றம் செய்தல், புதிய ரேஷன் கார்டு, நகல் மின்னணு குடும்ப அட்டை, மாற்றுத்திறனாளிகள், வயதானவர்கள் ஆகியோர்களுக்கு அங்கீகார சான்று வழங்குதல், குடும்ப தலைவர் இறந்திருந்தால், அவரது புகைப்படத்தை மாற்றம் செய்வதற்கு, புதிய குடும்ப தலைவரின் புகைப்படத்துடன் விண்ணப்பம் செய்தல் மற்றும் தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகார்களை அளித்து நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2019-ன் படி பயன்பெறலாம்.

இந்த தகவல் அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்