< Back
மாநில செய்திகள்
திருவள்ளூர் மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
திருவள்ளூர்
மாநில செய்திகள்

திருவள்ளூர் மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

தினத்தந்தி
|
8 Nov 2022 1:39 PM GMT

திருவள்ளூர் மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று பொதுமக்கள் குறைத் தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது. அப்போது கலெக்டர் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றார். கூட்டத்தில் திருவள்ளூர், திருத்தணி, ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், கும்மிடிப்பூண்டி, சோழவரம், மீஞ்சூர், பூந்தமல்லி, ஆவடி உள்பட பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் வேலை வாய்ப்பு, கடன் உதவி, பசுமை வீடுகள், சாலை வசதி, குடிநீர் வசதி என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி 288 மனுக்களை அளித்தனர். அந்த மனுக்களை பெற்று கொண்ட கலெக்டர் தகுதி உள்ள மனுக்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கிட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

அதைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்காக நடத்தப்பட்ட சிறப்பு குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்ட கலெக்டர் மாற்றுத்திறனாளிகளின் குறைகளை கேட்டறிந்து அவர்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். இந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாபு, தனித்துணை கலெக்டர் மதுசூதனன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் கலைச்செல்வி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) காயத்ரி சுப்பிரமணி மற்றும் பல்வேறு துறையை சேர்ந்த அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்