< Back
மாநில செய்திகள்
பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டம்
தூத்துக்குடி
மாநில செய்திகள்

பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டம்

தினத்தந்தி
|
24 May 2023 6:45 PM GMT

தூத்துக்குடி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது.

தமிழ்நாடு போலீஸ் டி.ஜி.பி. உத்தரவின்படி ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைதோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் நடந்து வருகிறது. அதன்படி நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமையில் நடந்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் ஏற்கனவே புகார் அளித்த 32 மனுதாரர்கள் மீண்டும் புகார் மனு கொடுத்தனர்.

அதேபோன்று புதிதாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 40 பேரும் மனு கொடுத்தனர். நேற்று ஒரே நாளில் மொத்தம் 72 பேர் மனு கொடுத்தனர். அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்