< Back
மாநில செய்திகள்
போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டம்
திருநெல்வேலி
மாநில செய்திகள்

போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டம்

தினத்தந்தி
|
9 Aug 2023 10:59 PM GMT

நெல்லை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது.

நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று காலையில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. துணை போலீஸ் கமிஷனர் சரவணக்குமார் தலைமை தாங்கினார். இதில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்கள் கொடுத்தனர். அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.

அதேபோல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும் பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது. போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் தலைமை தாங்கினார். அவரிடம் பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அவர் உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்