< Back
மாநில செய்திகள்
பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம்
கடலூர்
மாநில செய்திகள்

பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம்

தினத்தந்தி
|
23 Jan 2023 7:07 PM GMT

கடலூரில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடந்தது.

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்கள் பெற்றார். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் குடும்பஅட்டை, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா, நிலஅளவை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மொத்தம் 335 மனுக்களை அளித்தனர். அதனை பெற்றுக்கொண்ட கலெக்டர், பொதுமக்கள் அளித்த மனுக்களை தீர ஆராய்ந்தும், கள ஆய்வு செய்தும், விதிமுறைகளுக்குட்பட்டும் துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரருக்கு தீர்வு வழங்க வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

கூட்டத்தில் வருவாய் அலுவலர் பூவராகவன், தனித்துணை ஆட்சியர் கற்பகம் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


மேலும் செய்திகள்