< Back
மாநில செய்திகள்
பார்முலா 4 கார் பந்தயத்தை பொதுமக்கள் இலவசமாக பார்க்கலாம் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
மாநில செய்திகள்

பார்முலா 4 கார் பந்தயத்தை பொதுமக்கள் இலவசமாக பார்க்கலாம் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

தினத்தந்தி
|
24 Aug 2024 8:03 AM GMT

போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில் கார் பந்தயம் நடத்தப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னை,

சென்னையில் வரும் ஆகஸ்ட் 31ம் தேதி ஃபார்முலா 4 கார் பந்தயத்தை நடத்த தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் முடிவு செய்துள்ளது. ஏற்கனவே கடந்த டிசம்பர் மாதம் நடக்கவிருந்த போட்டி ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், அந்த போட்டியை தற்போது நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:

14 கார் பந்தயத்தை 8,000 பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட உள்ளன. சனிக்கிழமை காலையில் கார் பந்தயத்தை பொதுமக்கள் இலவசமாக பார்க்கலாம். சனிக்கிழமை மதியத்திற்கு மேல் தகுதிச்சுற்று போட்டிகள் நடத்தப்படும். இரவு 10.30 மணிவரை கார் பந்தய போட்டிகள் நடைபெறும். போக்குவரத்துக்கு எந்தவிட இடையூறும் ஏற்படாத வகையில் கார் பந்தயம் நடத்தப்படும்." என்றார்.

மேலும் செய்திகள்